அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 14 ஆகஸ்ட், 2013

மதசார்பற்ற இந்தியாவை வலுப்படுத்த உறுதியெடுப்போம்: எம்.எச்.ஜவாஹிருல்லா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மதசார்பற்ற இந்தியாவை வலுப்படுத்த உறுதியெடுப்போம்: எம்.எச்.ஜவாஹிருல்லா



மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடுள்ள அறிக்கையில்,

விடுதலை திருநாள் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து மதங்களை கடந்து சாதிகளை கடந்து தோலோடு தோல் நின்று அரிய பெரும் தியாகங்களை செய்து விடுதலை பெற்றுத் தந்த விடுதலை போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவூகூறுவோம். பல மலர்களும் பூத்துக் குலுங்கும் கதம்ப மலர் தோட்டமாக அனைத்து மதங்கள், அனைத்து சாதிகள், அனைத்து பிரிவினர்களும் எல்லா உரிமைகளும் பெற்று வாழும் ஒரு இந்தியாவைத்தான் அந்த விடுதலை போரட்ட வீரர்கள் காண விரும்பினார்கள். அவர்கள் கனவு கண்ட மதசார்பற்ற, சமதர்ம ஜனநாயக இந்தியாவை வலுப்படுத்த இந்த நாளில் உறுதியெடுப்போம்.


விடுதலைப் பெற்ற 66 ஆண்டுகளுக்கு பிறகும் நமது இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது என்று நமது பிரதமரே கவலைப்பட்டுள்ளார். சுத்தமான காற்று, ஆரோக்கியமான உணவு, மாசில்லாத குடிநீர், குறைந்த கட்டணத்தில் கல்வி Gr சாமானிய இந்தியர்களுக்கு கிடைப்பது என்பது கடினமாக உள்ளது. நாட்டின் கனிம வளங்கள், நிலவாயு வளங்கள் எல்லாம் பெரும் பண முதலைகளால் கொள்ளை அடிக்கப்படுகின்றன. கடலோரங்களில் அமைக்கப்படும் ஆலைகள் ஏற்படுத்தும் மாசுவினால் கடலோர வாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அனைத்து தளங்களிலும் ஊழல் தலைத்தோங்கி சாமானிய இந்தியர்களின் வாய்ப்புகள் பறிப்படுகிறது. இந்த இழிநிலைகளையேல்லாம் களைவதற்கு இந்த நாளில் உறுதியேடுப்போமாக! இவ்வாறு கூறியுள்ளார்.



பிணக்குகள் நீங்கி இணக்கம் மலரட்டும் 

மனிதநேய மக்கள் கட்சியின் விடுதலை நாள் வாழ்த்துச் செய்தி




மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் வாழ்த்துச் செய்தி செய்தி:

இந்திய திருநாடு தனது விடுதலை திருநாளை கொண்டாடும் வேளையில் அனைத்து மக்களுக்கும் எம் உளமார்ந்த விடுதலை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரும்பாடுபட்டு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று இணைந்து பெற்ற விடுதலையை பேணிக்காக்க அனைவரும் உறுதி ஏற்போம். நாட்டின் பணவீக்கம் இந்திய நாணயத்தின் சர்வதேச மதிப்பு வீழ்ச்சி, எல்லையில் அத்து மீறும் சீனா பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளின் சூழ்ச்சி, வீழ்த்தப்படவும் மக்கள் இடையே இன, மத பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் லாபம் பெற முயலும் பாசிச சக்திகளின் சதிகள் முறியடிக்கப்படவும் ஒற்றுமையுடன் பாடுபடுவோம்.

இந்தியாவை உலக அரங்கில் வல்லரசாக மட்டும் இன்றி மனிதநேயமிக்க நல்லரசாக மென்மேலும் உயர்த்திட ஒன்றுபட்டு உழைப்போம் என இந்த விடுதலை நாளில் சூளுரைப்போம்.





இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!