அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

திங்கள், 29 ஏப்ரல், 2013

தினமலரை கண்டித்து வேலூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்..மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தினமலரை கண்டித்து வேலூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்


வேலூர் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில், முஸ்லிம் விரோத போக்கை தொடர்ந்து வெளிப்படுத்தும் தினமலரை கண்டித்தும், அந்த பத்திரிகை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமுமுக சார்பில் இன்று (26/04/13) வேலூர்-அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மத் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மமக அமைப்பு செயலாளர் மவ்லவி SS நாசர் உமரி உரை நிகழ்த்தினார், மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவர் தனது உரையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தினமலர் நபி (ஸல்) அவர்களை கொச்சை படுத்தும் நோக்கில் கார்ட்டூன் வெளியிட்ட போது, முஸ்லிம்களால் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். அதை தொடர்ந்து சில காலம் முஸ்லிம்களிடம் வாலாட்டாமல் இருந்துவிட்டு தற்போது மீண்டும் தன்னுடைய பாசிச முகத்தை காட்ட தொடங்கி உள்ளதை வன்மையாக கண்டித்தார், இதே நிலை தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.



பெங்களுர்குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

தமுமுக ஆர்ப்பாட்டம பெங்களுர்குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமுமுக சார்பில் நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையத்தில் 24/4/13/ அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


  • இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
  • இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!