அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சென்னை பிராட்வே டான் போஸ்கோ பள்ள் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது ....எம்.ஹெ ச். ஜவாஹிருல்லா ஹ் அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி
அருள் நிறைந்த இந்த இனிய ஈகை திருநாளில் கருணை மிக்க யா அல்லாஹ், இத்திருநாளை அனுபவிக்கும் பாக்கியம் தந்த உன்னிடம் கையேந்தி எங்கள் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.
அகிலத்தார் அனைவரையும் படைத்த எங்கள் இரட்சகனே! பெருமை, பொறாமை, கர்வம், பேராசை , குரோதம் முதலிய தீய குணங்களிலிருந்து எங்கள் உள்ளத்திற்கு விடுதலை வழங்கி அதற்கு பகரமாக தன்னடக்கம், மன நிறைவு, இறக்கம் மற்றும் அன்பு முதலிய நற்பண்புகளால் எங்கள் நெஞ்சம் நிரம்பி ததும்புவதற்கு உன்னிடம் கெஞ்சுகிறோம்.
உனது நிகரில்லா கருணைக்கு முன் எங்கள் சிரத்தைத் தாழ்த்தி வேண்டுகிறோம். அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் பாதுகாப்பாயாக
ரமளானில் பெற்ற பயிற்சியால் புதிய எழுச்சி பெற்றுள்ள நாங்கள் வரும் காலங்களில் பலம் மிக்க ஈமானுடன் வாழ்வதற்கு உதவிடுவாயாக.
இந்த திருநாளில் உன்னிடம் மன்றாடுகிறோம் யா அல்லாஹ்.
ரமலான் முழுவதும் உன்னை நெருங்கும் வகையில் எங்கள் செயல்பாடுகளை அமைத்து கொண்டோம். உன்னிடம் மன்றாடி இந்த திருநாளில் நாங்கள் சமர்ப்பிக்கும் பிராத்தனைகளை ஏற்றுக் கொள்வாயாக.
உங்களுக்கு என் நெஞ்சார்ந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
தகபல்லல்லாஹு மின்னா வ மின்கும்
--எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
மேலப்பாளையத்தில் இன்று IPP (TMMK) பெருநாள் தொழுகை நடைபெற்றது மாநில தலைவர் JSR உரை நிகழ்த்தினார் பெண்கள் உள்பட ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொன்டனர் மமக மாவட்ட செயலாளர் K.S.ரசூல்மைதீன் தலைமையில் மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்துஇருந்தனர்

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10


