அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

செவ்வாய், 15 அக்டோபர், 2013

நல்லிணக்கம் தழைத்தோங்க உறுதி எடுப்போம்! ...வறட்சி நீங்கி மலர்ச்சி பெருகட்டும்... (( தியாக திருநாள் என்றும் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக் செய்தி ))

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நல்லிணக்கம் தழைத்தோங்க உறுதி எடுப்போம்! ...வறட்சி நீங்கி மலர்ச்சி பெருகட்டும்... (( தியாக திருநாள் என்றும் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக் செய்தி ))

நல்லிணக்கம் தழைத்தோங்க உறுதி எடுப்போம்! 


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்றஉறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக் செய்தி 

தியாகத் திருநாளாம் பக்ரீத் என்னும் ஈதுல் அழுஹா நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 

இறைத்தூதர் இப்றாஹீம் மற்றும் அவர்களின் புதல்வர் இறைத்தூதர் இஸ்மாயீல் ஆகியோரின் ஒப்பற்றதியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் தியாகத் திருநாள் உலகமெங்கும் முஸ்லிம்களால்கொண்டாடப்படுகின்றது. 

இந்த திருநாள் கொண்டாடப்படும் தருணத்தில் இறைத்தூதர் இப்ராஹீமும்அவரது புதல்வர் இஸ்மாயீலும் மக்கா நகரில் எழுப்பிய காபா ஆலயத்திற்கு உலகமெங்கிலிருந்தும் இலட்சக்கணக்கான முஸ்லிம் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். 

எந்த நிறமுடையவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசினாலும், எந்த குலத்தில் பிறந்தாலும்,மனிதர்களிடையே எத்தகைய வேற்றுமை இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களேஎன்பதை இந்த தியாகத் திருநாள் நமக்கு எடுத்துரைக்கின்றது. 

இதே போல் மன இச்சைகளை அடக்கிதியாகம் செய்வதின் சிறப்பையும் இந்த தியாக திருநாள் உணர்த்துகின்றது. இத்தகைய உணர்வுகளை உள்வாங்கி அனைத்து மனிதர்களையும் சகோதரர்களாக உளமாற நேசித்து, 

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டின் நலனுக்காக நம்மை அற்பணித்துக் கொள்ள இந்த திருநாளில்உறுதி எடுத்துக் கொள்வோமாக. 

நாட்டில் அனைத்து மக்களுக்கிடையில் நல்லிணக்கம்தழைத்தோங்குவதற்கும் வறட்சி நீங்கி தமிழகம் வளம் பெறுவதற்கும் இந்த திருநாளில் இறைவனிடம்பிரார்த்திப்போமாக. 

-எம்.எச்.ஜவாஹிருல்லா




வறட்சி நீங்கி மலர்ச்சி பெருகட்டும்... 


தமுமுக தலைவரின் தியாக திருநாள் வாழ்த்து மனித சமூகம் தியாகத்தை நினைவு கூறும் உன்னத நாளாக தியாக திருநாள் என்றும் ஹஜ்ஜு பெருநாள் என்றும் அழைக்கப்படும் ஈதுல் அள்கா விளங்குகிறது. 

தியாகத்தின் மேன்மையை பறை சாற்றும் இந்த நன்னாளில் அனைவருக்கும் அனைத்து நலன்களும் பெற்று நல்வாழ்வு பெற வாழ்த்துகிறேன். 

முஷாபர் நகர் பகுதியில் இன்றுவரை லட்சத்திற்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிவாரண முகாம்களில் வாடும் அவல நிலை , சர்வதேச சந்தையில் இந்திய நாணய மதிப்பின் வீழ்ச்சி , விலைவாசி ஏற்றம் , பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரிப்பு, மது விலக்கு ஒழிக்கப்படாதது உள்ளிட்டவை நம் மனதை வருத்தி வருகின்றன. 

இது போன்ற துயர நிகழ்வுகளை, தீமைகளை முறியடித்து மக்கள் நலம் பேண நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் உறுதி பூணவேண்டும் இந்திய திருநாட்டில் ஒற்றுமை பேணி வாழும் மக்களின், 

மத்தியில் சண்டை , பிளவு , பிரிவினை போன்றவற்றை ஏற்படுத்த மத வாத பாசிச சக்திகள் முயன்று வருகின்றன. அதனை நாம் ஒன்றுபட்டு முறியடிக்க இந்த தியாக திருநாளில் சபதம் ஏற்போம் 

-J.S.ரிஃபாயி ரஷாதி மாநில தலைவர் தமுமுக