அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 27 செப்டம்பர், 2014

பர்மா முஸ்லிம்களின் கசாப்புகடைகாரன்’ இலங்கை வருகை: முஸ்லிம்களே அவமானம்!

அன்பு உறவுகளுக்கு..! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

பர்மா முஸ்லிம்களின் கசாப்புகடைகாரன் 
இலங்கை வருகை: முஸ்லிம்களே அவமானம்!


கொழும்பு: பொதுபல சேனாவின் உயர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரவிருக்கும் மியன்மார், 969 அமைப்பின் சர்சைக்குரிய தலைவர் அசின் விராது தேரரின் வருகை பயத்தினை உண்டுபண்ணுவதாக முஸ்லிம் கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் கவுன்சில் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பர்மா முஸ்லிம்களின் கசாப்புகடைகாரன்என்று வர்ணிக்கப்படும், மியன்மாரின் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பின் தலைவரான விராது தேரர் தலைமையில் நுற்றுக்கணக்கான பர்மா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

பொதுபல சேனாவின் எதிர்வரும் 28ம் திகதி உயர் சங்க சம்மேளன கூட்டத்துக்கே இவருக்கு விஷேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச டைம் சஞ்சிகை இவர் பற்றி அட்டைப் படக் கட்டுரை எழுதியபோது இவர் ஒரு பர்மாவின் பௌத்த தீவிரவாதி என விமர்சனம் செய்திருக்கும் நிலையில், அப்படியான விராது தேரர் இலங்கை வரும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும், இலங்கையின் சமாதானம் மற்றும் அமைதிக்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்றும் முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் உலக நாடுகள் இவரை குற்றவாளியாகவே இனங்கண்டுள்ளன.

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடந்த ஜூன் மாதம் நிகழ்த்திய ஆவேசமான உரையே அளுத்கமை வன்முறையை தோற்றுவித்தது போன்று, பௌத்த அடிப்டைவாதிகளுக்கு ஆதரவளிக்கும் இவர், இலங்கை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினால் அதன் மூலம் இங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு மியன்மாரில் இவரைச் சந்தித்த ஞானசார தேரர் இவருடன் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஆகவே வன்முறைகளை தவிர்க்கும் பொருட்டு இவரை நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது என முஸ்லிம் சமூகம் சார்பாக தாம் ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாகமுஸ்லி கவுன்சில் எழுதிய அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவனது வருகையை அனைத்து முஸ்லிம்களும் எதிர்க்க வேண்டும். Thanks:-திருச்சி முத்தலிப்