அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தலைவர் ஜே.எஸ். ரிபாயீ வெளியிடும் பெருநாள் வாழ்த்துச் செய்தி:

​​​தலைவர் ஜே.எஸ். ரிபாயீ வெளியிடும் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
சமூக நல்லிணக்கத்திற்காக தியாகம் செய்ய சபதமேற்போம்!மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ வெளியிடும் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
இப்ராஹீம் நபி(ஸல்) அவர்களும், அவரது குடும்பத்தாரும் இறைச் செய்தியை கொண்டு சென்று மக்களை நேர்வழிப்படுத்த எடுத்த முயற்சிகளில், பாலைவனப் பெருவழியாம் அரபுப் பகுதிகளில் அவர்கள் செய்த பணிகள் இன்று ஹஜ்ஜின் கடமைகளாக மக்காவிலும், ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டு பெருநாள் நிகழ்வாக உலகின் இதர பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இறைவனின் பெயரால் செய்யப்படும், அனைத்து இஸ்லாமியக் கடமைகளும், கூர்ந்து நோக்கப்பட்டால் அதில் மனிதர்களுக்கிடையே இருக்கவேண்டிய ஒற்றுமை பண்புகளை, சகோதரத்துவத்தை, மனிதநேயத்தைப் பற்றி பயிற்சிகள் இருப்பதையே காணலாம். அதன் உச்சக்கட்ட பயிற்சிதான் ஹஜ் நிகழ்வுகள்.
பல மொழிகள், பல நாடுகள், பல கலாச்சாரங்கள் என்ற வேறுபாடுகளை மறந்து, உடையாலும், தோற்றத்தாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு, ஒரே கோஷம், ஒரே ஆடை என்ற நிலையில் ‘நம்மை இயக்குவது இறைக் கோட்பாடு; நமக்குள் ஏன் பாகுபாடு’? என்ற புரிந்துணர்வும் பயிற்சியும் ஹஜ்ஜில் தரப்படுகிறது.
இப்பயிற்சியை நாம் வாழும் பகுதிகளிலும் மேற்கொண்டு கொள்கையால், வழிபாட்டு முறைகளால் வேறுபட்டாலும், நாம் அனைவரும் ஒன்றாய், நன்றாய் வாழவேண்டியவர்கள் என்ற நிலையை அடைய முயற்சிப்போம்.
நாம் வாழும் நாட்டில் அமைதியும், சுபிட்சமும், சமூக நல்லிணக்கம் நிலவிடவும், சகோதரத்துவம் மேலோங்கிடவும் நாம் இத்திருநாளில் சபதமேற்போம்.
இவண்ஜே.எஸ்.ரிபாயீதலைவர், மமக