அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 10 மே, 2013

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! ! 

சமுதாயம் திரண்டது! சர்க்கார் மிரண்டது!

அப்பாவி முஸ்லிம்கள் மேல் பொய் வழ்க்கு போடும்
காவல் துறையைக் கண்டித்து இஸ்லாமிய இய்க்கங்களின் கூட்டமைப்பின் போராட்டத்தை தடுக்க முயன்ற
அரசின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து 
அநீதிக்கு எதிராக அலைகடல் என திரண்ட மக்கள்!

கிச்சான்புகாரி உட்பட..இஸ்லாமிய இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்யும் காவல்துறை கண்டித்தும் கர்நாடகா காவல்துறையின் பாசிச வெறியின் உச்சத்தை கண்டித்தும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைபின் எற்பாட்டில் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களும் அரசியல் கட்சியின் தொண்டர்களும் பெரும் திறலாக கலந்து கொண்டு தன் கண்டனத்தை பதிவு செய்தார்கள்..


எதற்கும் உணர்சி வசப்படாமல் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட இந்த 24 இயக்க கூட்டமைப்பை ஒருங்கிணைக்கும் அப்பல்லொ ஹனிஃபா அவர்கள் சிறைவாசிகளின் குடும்பத்தினர் வடித்த கண்ணீரைக் கண்டு உணர்ச்சி வசப்ப்பட்டு அரசுக்கு எதிராக எச்சரிக்கை ஆர்பரித்து எச்சரிக்கை விடுத்தது இன்றைய ஆர்பாட்டத்தின் உணர்ச்சிகளில் ஒரு துளியாகும்!
போடாதே போடாதே பொய் வழக்குப் போடாதே !உளவுத்துறையா களவுத்துறையா ?காவல்துறையா காவித்துறையா ?எனும் விண்ணதிரும் கோசமும் ,எந்த மேடையும் ஏறி பேசியிராத எளிய தமிழில் பேசிய பாதிக்கப்பட்ட குடும்பத்துப் பெண்களின் கண்ணீரும் இன்றைய ஆர்பாடக் களத்தின் இரு வேறு உணர்வுகள்!






கருப்பு வெள்ளை படைகளாக வந்து 1000 -ம் காவல்துறைக்கு.பீதியை கிளப்பிய த.மு.மு.க.வின் தொண்டர்களும்..ம.ம.க.வின் பொருப்பாளர்களும் கலந்து கொண்டு தன் சிறைச்சகோதரனை மீட்க களமாடி கண்மணிகள்...




நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் 
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! 
எனும் இறை வசனத்தின் படி 
வண்ணங்கள் வேறாக இருந்தாலும் 
எங்களின் எண்ணங்கள் ஒன்றுதான்! 
அது அப்பாவிகளின் விடுதலைதான் 
என அவரவர் கொடியோடு அணி திரண்ட 
அடலேறுகளின் ஆர்ப்பரிப்பு! 
அல்லாஹ் இந்த ஒற்றுமையை நீடித்து வைப்பாயாக!


ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும் 
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டுமாக....ஆமீன்!