அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

சவுதி அரேபியாவில் வேலைசெய்யும் வெளிநாட்டிருக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையிலிருந்து 3 மாத கால அவகாசம் அளித்து மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


சவுதி அரேபியாவில் வேலைசெய்யும் வெளிநாட்டிருக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையிலிருந்து 3 மாத கால அவகாசம் அளித்து மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


இந்த அறிவிப்பிற்குப் பின் நமது இந்தியத் தூதரகத்தில் சவூதி மத்திய மண்டல தமுமுக தலைவர் ஹூஸைன்கனி உட்பட பல்வேறு சமூக நல பிரதிநிதிகளுடன் இந்தியத் தூதர் மேதகு ஹமீத் அலி ராவ் அவர்களின் தலைமையில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.


அதில் அரசு வழங்கி உள்ள இந்த 3 மாத காலத்திற்குள் நமது தேசத்தவர்களுக்கு சட்ட ரீதியாக எவ்வாறெல்லாம் உதவிடலாம் என்று கருத்துக்கள் பறிமாறப்பட்டன. தூதரகத்தின் சார்பில் திட்டமிட்டிருந்த திட்டங்கள் விளக்கப்பட்டது. எவ்வாறு மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது பற்றியும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள் பற்றியும் கருத்துக்கள் பறிமாறப்பட்டன.


பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வகைகள்.


ஸ்பான்ஸரின் (கஃபில்) விபரம் தெரியாமை, ஸ்பான்சர் சிகப்பு கேட்டக்கிரியில் உள்ளார் அதனால் தாயகம் செல்லமுடியாத பிரச்சனை,

ஒரிஜினல் பாஸ்‍போர்ட் உள்ளது ஆனால் இக்காமா முடிந்து விட்டது,

ஹூரூப் கொடுக்கப்பட்டது, எந்த விசாவில் வந்தோம் என்றே விபரம் தெரியாமல் பணியாற்றிவிட்டு தாயகம் செல்ல முடியாமல் தவிப்பவர்கள்,

இவர்கள் அனைவரையும் கவனத்தில் கொண்டு உரிய சட்ட உதவிகள் செய்திட இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது.

சவூதி அரசு கொடுத்துள்ள 3 மாத காலத்திற்குள் சவூதி அரசுடன் பேசி பாதுகாப்பாக தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

தங்களது தகவல்களை உடனே இந்தியத் தூதரகத்திற்கு தெரியப்படுத்துங்கள். நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ, அல்லது நமது தமுமுக நிர்வாகிகள் மூலமாகவோ.

தகவல் பெறுவதற்கு ஏப்ரல் 15 வரை என்று தூதரகம் அறிவித்துள்ளது.

ஒரிஜினல் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் கண்டிப்பாக குறிப்பிடவும் உங்களுக்கு EC தேவையில்லை. அந்த பாஸ்போர்ட்டிலேயே Exit அடித்து அனுப்பி வைக்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள வகையில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தை அனுகவும்.

அல்லது please contact First Secretary (Community Welfare), Telephone 4884032. என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நகரை விட்டு வெளியில் உள்ளவர்கள் இந்த முகவரிக்கு அஞ்சல் செய்யவும்.

The complete profile and other information of the interested legal firms shall reach the Indian Embassy, Riyadh, [B-1, Diplomatic Quarters, PB No. 94387, Riyadh – 11693], Saudi Arabia, on or before April 15, 2013

மின் அஞ்சல் முகவரி

sscw@indianembassy.org.sa; hoc.riyadh@mea.gov.in and pol.riyadh@mea.gov.in

தம்மாம் தமுமுக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது கிழக்கு மண்டலப்பகுதியில் உள்ளவர்கள் உங்களுக்கு அருகில் உள்ள தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள். மற்ற பகுதி தமுமுக நிர்வாகிகள் விபரங்கள் அறிய மண்டல நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்.


நன்றி.
-- 
Hussain Ghani
President
TMMK,
Central Region,
Riyadh - Saudi Arabia.
+966 502929802, +966 549977929.

------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------

எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! அல் குர்ஆன் 3:08.