அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

திங்கள், 17 ஜூன், 2013

மாபெரும் எழுச்சி...! சூடுபிடிக்கிறது ஜூலை 6 பேரணி!!!



ஏகஇறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்..

____________________________________________________________

மாபெரும் எழுச்சி...! சூடுபிடிக்கிறது

ஜூலை 6 பேரணி!!!

____________________________________________________________

தமிழகம் முழுவதும் ஜூலை 6 அன்று தமுமுக நடத்தும் முஸ்லிம்களின் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி குறித்தான விளம்பரங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன. ஆம் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து உயர்த்தப்பட வேண்டும், 

10 ஆண்டுகள் நிறைவு செய்த சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், திருமணப்பதிவுச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கான திருத்தம் கொண்டு வர வேண்டும் ஆகிய முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி என்று தமுமுக மாநில நிர்வாக குழுவில் அறிவித்தது தான் தாமதம். 

தமிழகம் முழுவதும் தமுமுக வினர் பம்பரமாய் சுழன்று களப்பணியாற்றி வருகிறார்கள். பிராமண்ட சுவர் விளம்பரங்கள், கண்ணை கவரும் டிஜிட்டல் போர்டுகள், பதாகைகள், விளம்பர பேனர்கள், வால்போஸ்டர்கள், பிட் நோட்டிசுகள், ஸ்டிக்கர் வகைகள் என ஒரு பக்கம் விளம்பரப்படுத்தி சமுதாய மக்களை கவர்ந்து வருகிறார்கள். மறுபக்கம் தெருமுனைப் பிரச்சாரங்கள், வாகன ஊர்வலங்கள், தலைவர்கள் பங்கு பெறும் 

பிரமாண்ட பொதுக்கூட்டங்கள், மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, வட்ட செயல்வீர்கள் கூட்டம், தனி நபர் சந்திப்பு, ஜமாத்தார்கள் சந்திப்பு என தினம் தினம் ஜூலை 6 பேரணிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில நிர்வாகிகளின் தனிகரில்லா செயற்பணிகள், ஓய்வில்லா களப்பணிகள் என பேரணி குறித்தான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழக அரசையும், அரசியலையும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு இறைவனின் மாபெரும் உதவியோடு சென்னை லட்ச்சக்கணக்கில் முஸ்லிம்கள் திணறடிக்கப்போகின்றார்கள்... 

எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே... இறுதி வெற்றி நமது அணிக்கே....


- முத்துப்பேட்டை முகைதீன்
















-- 















~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~ 
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 

எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10

~~~~~~~~~~~~~~~~~~~~~~


_______________________________________________________

"T M M K" AL-KHOBAR. K.S.A

~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!


_______________________________________________________