அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 12 ஜூலை, 2013

பெங்களூர் சிறையில்,,, அப்பாவி முஸ்லிம்கள்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பெங்களூர் சிறையில்,,, அப்பாவி முஸ்லிம்கள்..
====================================

ஏப்ரல் 17 ல் பி ஜே பி அலுவலகத்திற்கு அருகில் குண்டு வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி தமிழக இளைஞ்சர்களை பெங்களூர் மத்திய சிறையில் தமுமுக மூத்த தலைவர் பேரா: ஜவாஹிருல்லா தலைமையில் 04,07,13 அன்று சந்தித்த போது போலிஸ் காவலில் அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகளை சொன்னபோது அனைவரும் கண்கலங்கினோம்,தமிழகத்தில் அவர்களுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு பிறகே சித்திரவதைகள் குறைந்ததாக சொன்னார்கள். 

(கர்நாடக முதல்வர் சித்த ராமையாவை இஸ்லாமிய அமைப்புகள் கூட்டமைப்பின் சார்பில் சந்தித்த போது விரிவாக எடுத்து சொல்லி மனு கொடுக்க பட்டுள்ளது).

சிறைக்கு வெளியில் வந்தபோது ஒரு மெல்லிய தேகம் கொண்ட இளைஞ்சரை சந்தித்தோம் அவர்தான் சிலமாதங்களுக்கு முன்பு "லஸ்கர் தொய்ப" தீவிரவாத அமைப்பை சேர்ந்த வர்கள் என்று கைது செய்யப்பட்ட 14 முஸ்லிம் பட்டதாரிகளில் ஒருவர், டி ஆர் டி ஒ வில் இளம் விஞ்சாணியாக பணியாட்டிரிய "எஜாஸ் அஹ்மத் மிர்சா" 14 பேரில் 3 பேர் அப்பாவிகள் என்று விடுதலையாகி இருதனர், இன்னும் 11 பேர் சிறையில் உள்ளனர் அவர்களை பார்க்க சிறைக்கு வந்திருதார் மிர்சா, 11 பேரில் மிர்சாவின் உடன்பிறந்த தம்பியும் ஒருவர்.

எஜாஸ் அஹ்மத் மிர்சா செய்த தவறு நன்றாக படித்து இந்தியாவின் பாதுகாப்பு துறையில் விஞ்சானிய பணியாற்றியதுதான்,

இவரை இங்கிருந்து வெளியேற்ற சதிசெய்த சதிகாரர்கள் இந்த இளம் விஞ்சானிக்கு கொடுத்த பட்டம் "முஸ்லிம் தீவிரவாதி" இன்று வேலை இழந்து சிறை வாசலில் நின்று கொண்டிருக்கிறார், இவரை டி ஆர் டி ஒ வில் மீண்டும் வேலைக்கு சேர்த்துகொள்ளவேண்டும் என்று முன்னால் உச்ச நீதி மன்ற நீதிபதியும் அகில இந்திய பிரஸ் கவன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு அவர்கள் பிரதமருக்கு கோரிக்கை வைத்ததும் நினைவிருக்கும்.

ஆனால் உண்மையான தீவிரவாதியான மலேகான் மற்றும் ஜாம் சவ்தா எக்ஸ்பிரஸில் குண்டு வைத்த கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் 5 ஆண்டுகளாக சிறையில் இருந்தவாரே பணியில் இருப்பது போன்று சம்பளம் பெற்று வருகிறார்,

இந்தியாவின் நீதி பரிபாலனம் நினைத்தாலே சிலிர்க்க வைக்கிறது, இந்நேரத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது "இந்திய தேசத்தில் முஸ்லிம்களாக வாழ்வதுதான் ஆபத்தானது"

பெங்களூர் சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் விடுதலைக்காக புனிதமிகு ரமலானில் பிரார்த்திப்போம்.