அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

திங்கள், 8 ஜூலை, 2013

த.மு.மு.க போராட்டம் : தடை செய்து மூக்குடைபட்ட தமிழக அரசு - பேராசிரியர் மார்க்ஸ் அந்தோணிசாமி

த.மு.மு.க போராட்டம் : தடை செய்து மூக்குடைபட்ட தமிழக அரசு - பேராசிரியர் மார்க்ஸ் அந்தோணிசாமி

பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்தல் {அண்ணா பிறந்த நாளில் இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட போதெல்லாம்முஸ்லிம் கைதிகள் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை},முஸ்லிம்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு அளவைஅதிகரித்தல், தமிழக அரசின் திருமணப்பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள்செய்தல் என்கிற 3 கோரிக்கைகளை வைத்து (ஜூலை 6, 2013) பேரணி நடத்தக்கோரிய அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு.

த.மு.மு.க நீதிமன்றத்திற்குச் சென்ற போது அங்கும் நீதி கிடைக்கவில்லை.
தடையை மீறிப் பேரணி செல்வதென அவர்கள் முடிவு செய்தனர். காவல்துறைகெடுபிடி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்தவேன்கள், லாரிகள் எல்லாம் திண்டிவனம் தொடங்கி ஆங்காங்குநிறுத்தப்பட்டன, நகரத்திற்குள்ளும் அடையாறு, பூந்தமல்லி எனப் பல்வேறுநுழை வாயில்களில் பஸ்கள் நிறுத்திச் சோதனைகள் இடப்பட்டன.



அப்படியும் தடையை மீறி ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கூடஇருந்தவர்கள் மீது அடக்குமுறை மேற்கொண்டு கலைக்கப்படுவார்கள்என்பதுபோலச் செய்திகள் பரவியதை ஒட்டி மனித உரிமை அமைப்புகள்சார்பாகச் சிலர் பார்வையாளர்களாக வந்தால் நல்லது எனச் சிலர் கருத்துத்தெரிவித்தனர்.



சுமார் 11 மணி வாக்கில்தான் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடிந்தது. பேரா.மு.திருமாவளவன், தோழர் நட்ராஜ், சுற்றுச் சூழல் ஆர்வலர் வி.சீனிவாசன்,வழக்குரைஞர் கி. நடராசன் ஆகியோர் உடன் வரச் சம்மதித்தனர்.



சுமார் 2.30 மணி வாக்கில் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு எதிரில்அண்ணாமலைப் பல்கலைக் கழக தூரக் கல்வி அலுவலகத்திற்கு வேளியேகூடினோம். கடுமையான போலிஸ் குவிப்பு. கைது செய்துஅகற்றப்படுவோர்களைக் கொண்டு செல்ல ஏராளனமான MTC பஸ்கள்குவிக்கப்பட்டிருந்தன. பத்திரிக்கையாளர்கள் சிலர் காமராக்களுடன்நின்றிருந்தனர்.



பேரணிக்கு அனுமதி இல்லை எனவும், நீதிமன்றமும் அனுமதி மறுத்துவிட்டதுஎனவும், எனவே இங்கு கூடுவது சட்ட விரோதம் எனவும் மைக்கில் போலீசார்அறிவித்துக் கலைந்து செல்லுமாறு எச்சரித்துக் கொண்டிருந்தனர்.



சுமார் 200 த.மு.முகவினர் அங்கு நின்றிருந்தனர். திடீரென அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டனர். அதே நேரத்தில்பெருந்திரளில்மக்கள் எழும்பூர் ஆதித்தனார் சிலை அருகில் உள்ள ரவுண்டானவைச் சுற்றித்திரண்டிருப்பதாக யாரோ சொன்னார்கள்.



போலீஸ் காவல் இருந்ததை ஒட்டி ராஜரத்தினம் ஸ்டேடியத்தைப் பின்புறமாகச்சுற்றி வந்து ம.தி.மு.க அலுவலகம் முன்பு போலீஸ் வாகனங்களுக்கு மத்தியில்எங்கள் டூ வீலர்களை நிறுத்திவிட்டு அப்படியே நகர்ந்து ரவுன்டானாவை ஒட்டிப்பல்லாயிரக் கணக்கில் கூடியிருந்த த.மு.மு.க தொண்டர்கள் மத்தியில்கலந்துகொண்டோம்.



ஏகப்பட்ட போலீஸ் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் ஒன்றும்தீவிரம் காட்டாமல் அமைதியாகவே தடிகளுடன் நின்றிருந்தனர். கருப்புவெள்ளைக் கொடிகள் அப்பகுதியை நிறைத்திருந்தன. "நாரே தக்பீர் !அல்லாஹூ அக்பர்" என்கிற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.



சுமார் 3.30 மணிவாக்கில் த.மு.மு.க தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்வந்தார். வேன் ஒன்றில் ஏறி நின்று முழக்கங்களை இட்டார். தொண்டர்கள்அவ்வழியே செல்லும் பொது மக்கள், குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்புஅளித்தனர்.



எனக்குச் சரியாக மதிப்பிட இயலவில்லை. சுமார் 5,000 பேர்கள் இருக்கலாம்.ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ள காலி பஸ்களில் ஏறி அமைதியாகக் கைதாகுமாறுதலைவர்கள் கேட்டுக் கொண்டனர். கைதானவர்களை ஏற்றிக் கொண்டு பஸ்கள்ஊர்ந்தன.



சுமார் 5 மணி வாக்கில் பேராசிரியர் மைக்கில் மீண்டும் பேசினார். மேலும் அங்குகூடி இருந்தவர்களைக் கைது செய்து கொண்டு போகத் தம்மிடம் வாகனங்கள்இல்லை எனப் போலீசார் கைவிரிப்பதாகவும் எனவே மற்றவர்கள்அமைதியாகக் கலையுமாறும் வேண்டிக்கொண்ட பின் கூடியிருந்தோர்கலைந்தனர்.


த.மு.மு.க 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது என நினைக்கிறேன். அதிலிருந்துஅவர்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களில் நானும்ஒருவன். 


அமைதியான வழியில் தமது கோரிக்கைகளுக்காக உறுதியாகப்போராடுபவர்கள் அவர்கள். எந்தக் காலத்திலும் சட்ட ஒழுங்குப் பிரச்சினைஏதும் அவர்களால் ஏற்பட்டதாக நான் அறிந்ததில்லை. சிறைக் கைதிகள்தொடார்பான கோரிக்கை எல்லாம் மிக நியாயமானவை. 



பேசாமல் பேரணியை நடத்தி விட்டுப் போக அனுமதி அளித்திருந்தால்ஊர்வலமாகச் சென்று மனு அளித்துவிட்டுச் சென்றிருப்பார்கள்.



இப்படித் தடை செய்து தமிழக அரசு மூக்கை உடைத்துக் கொண்டிருக்கவேண்டியதில்லை.
எப்படியோ த.மு.மு.க தொண்டர்கள் உற்சாகமாக வீடு திரும்பினர்.



ம.தி.மு.க அலுவலகம் முன்பிருந்த கடையில் ஒரு சூடான டீயையும்போண்டாவையும் 

சாப்பிட்டுவிட்டு நாங்களும் கலைந்தோம்.-- 




:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::