அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 14 செப்டம்பர், 2013

மண்டிய இருள்கிழிக்கும் மாற்று அரசியலுக்கான மாபெரும் புரட்சியான "மனிதநேய மக்கள் கட்சி" நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறது மமக! பிப்ரவரி 8ல் திருச்சியைத் திணறடிக்கும் வகையில் மாநில மாநாடு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


மண்டிய இருள்கிழிக்கும் மாற்று அரசியலுக்கான மாபெரும் புரட்சியான "மனிதநேய மக்கள் கட்சி" நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறது மமக! பிப்ரவரி 8ல் திருச்சியைத் திணறடிக்கும் வகையில் மாநில மாநாடு!


தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக வளர்ந்து வரும் மமகஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாராகி வருகிறது.

ஏற்கனவே செம்மைப்படுத்தப்பட்டுள்ள கிளை அமைப்புகளை வலுப்படுத்தும் வகை யிலும்தொண்டர்களை களப் பணிக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அடுத்த மாதங்களுக்கான செயல் திட்டங்கள் கடந்த 4.9.2013 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கட்சியின் சார்பில் அதிகமான பொதுக் கூட்டங்கள்போராட்டங்கள் வழக்கத்தை விட அதிகமாக முன்னெடுக்கப்பட உள்ளது.

கட்சிக்கு சாதகமான பாராளுமன்றத் தொகுதியைக் கண்டறியும் வகையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் பணிக்குழு ஒன்றும் அமைக்கப்படும்.

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகை யிலும்அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மக்கள் பிரச்சனைகளை வழமையை விட அதிகமாக கையிலெடுப்பது என்றும் அக்டோபர் முதல் 10 வரை தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒன்றிய வாரியாக மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராட்டங்கள் நடத்துவது என்றும்,

தமிழகமெங்கும் நடைபெற்று வரும் மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையிலும்சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் நவம்பர் முதல் 15 வரை பரப்புரை ஒன்றை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நிதிநிலை மோசமான நிலையில் இருப்பதால்அடுத்தாண்டு ஜனவரி முதல் 15 வரை தேர்தல் நிதி வசூலிப்பது என்றும்வீடு வீடாகவீதி வீதியாக தொண்டர்களைக் களமிறக்குவது என்றும்,

கட்சியின் எழுச்சியை வெளிக்காட்டும் வகையில் பிப்ரவரி அன்று திருச்சி யில் பிரம்மாண்டமான மாநில மாநாட்டை நடத் துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிர உறுப்பினர் சேர்ப்புநிர்வாக சீரமைப்புகட்சிக் கொடி ஏற்றுதல் என இதனைச் சார்ந்த பணிகளும் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

தலைமை நிர்வாகக்குழுவின் முடிவுகள் கட்சித் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. பரப்புரை மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கான அடிப்படைப் பணிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மாவட்டப் பொதுக்குழுக்கள் கூட உள்ளதால் இனிவரும் நாட்கள் அரசியல் அரங்கில் மமகவை தனித்த முக்கியத்துவத்தோடு கவனிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை!
நாங்கள் நுழையாத வரை அது வெற்றிடம்!

நாங்கள் நுழைந்துவிட்டால் அதுவே வெற்றி இடம்!!

இன்ஷா அல்லாஹ் இந்தியாவே திரும்பி பார்க்கும் திருச்சியை...... 

பிரதமர் கணவு கான்பவனுக்கு அது மிக்கபெரிய சவாலாக அமையும்...

இன்ஷா அல்லாஹ் இந்த மாநாட்டில் பங்கெடுக்க தாயகம் வர இன்றே 

தயாராகிவிட்டோம்... சமுதாயமே சந்திப்போம் திருச்சியில்...