அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 7 செப்டம்பர், 2013

திருச்சியில் 13 வயது பள்ளி மாணவியின் கொலையில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க கோரியும்... குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும்... தமுமுக ஆர்ப்பாட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

திருச்சியில் 13 வயது பள்ளி மாணவியின் கொலையில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க கோரியும்... குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும்... தமுமுக ஆர்ப்பாட்டம்




தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக இன்று செப்டம்பர் 7 ம்தேதி சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் திருச்சியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியின் கொலையில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க கோரியும்... குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும்... 

சி.பி.சி.ஐ.டி போலீஸ் வழக்கை விரைந்து முடிக்க கோரியும்... மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்களின் தலைமையிலும்,மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம்ஷா,பைஸ் அஹமது,மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது மற்றும் மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது ரபீக் ஆகியோர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமுமுக மாநில் பொதுச்செயலாளர் காஞ்சி.அப்துல் சமது மற்றும் மதுரை மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் நஜ்மா பேகம் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். கூட்டத்தில் பெருந்திரளாக பெண்களும்,அண்களும் கலந்து கொண்டார்கள்.












::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
காவல்துறையைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

சென்னையில் தமுமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்



திருச்சியில் 13 வயது மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைதுசெய்யாமல் மெத்தனம் காட்டிவரும் காவல்துறையை கண்டித்து சென்னையிலும்திருச்சியிலும் இன்று தமுமுக பெரியளவில் கண்டன போராட்டத்தை நடத்தியது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாநில பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ்ம.ம.க இணை பொதுச்செயலாளர் ஹாரூண் ரஷீதுதமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனிமாநில பேச்சாளர் தைமிய்யா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தனிர். இதில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்