அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

திங்கள், 30 செப்டம்பர், 2013

உள்துறை அமைச்சரின் அறிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் - தமுமுக

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உள்துறை அமைச்சரின் அறிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் - தமுமுக



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

நாடு முழுவதும் அப்பாவி சிறுபான்மையினர் தவறுதலாக சிறையில் அடைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாநில முதல்வர்கள் எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் இக்கருத்தை தமுமுக முழுமையாக வரவேற்கிறது. மேலும் பல்வேறு தருணங்களில் இஸ்லாமிய இளைஞர்கள் தவறுதலாக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருவதாக தனக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வருவதாக குறிப்பிட்டுள்ள ஷிண்டே, இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

பொய் வழக்குகளில் சிறுபான்மையினர் கைது செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறுதலாக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதோடு அவர்கள் மறுவாழ்வுக்கும் மாநில அரசுகள் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் ஷிண்டே தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சரின் இக்கடிதத்தை அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்றுவதோடு, மத்திய அரசும் மாநிலங்கள் இவ்விஷயத்தில் முறையாக நடந்துகொள்கிறதா என கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என தமுமுக கேட்டுக் கொள்கிறது.