அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 24 ஏப்ரல், 2014

நெஞ்சார்ந்த நன்றிகள்

அன்பு உறவுகளுக்கு..!  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நெஞ்சார்ந்த நன்றிகள்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தொகுதியில் சராசரியாக 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகக்கடுமையாக களத்தில் போராடிய திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புதிய தமிழகம், திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்துப் பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஜமாத்தார்கள், உலமாக்கள், ஐ.என்.டி.ஜே., எஸ்.டி.பி.ஐ., தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்), சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை, பி.எப்.ஐ. மற்றும் சமுதாய அமைப்புகளுக்கும், மனசாட்சியுடன் பல இடங்களில் நடந்துகொண்ட ஏகத்துவ சொந்தங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது பணிகளுக்காக எல்லா நிலையிலும் ஒத்துழைத்த நல்லுள்ளங்களுக்கும், பிரார்த்தனைகள் புரிந்த உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் சகோதர, சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியினருக்காகப் பாடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சொந்தங்களுக்கும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மயிலாடுதுறை தொகுதியில் ஓய்வின்றி உழைத்த மனிதநேய மக்கள் கட்சியின் சொந்தங்களுக்கும் தேன்சிந்தும் வார்த்தைகளால் உளமாற நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைவன் நம் அனைவரையும் உழைப்பையும் பொருந்திக் கொள்வானாக... எல்லாப் புகழும் இறைவனுக்கே...

- எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி