அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 15 மே, 2013

உண்மையை வெளிக்கொண்டுவந்த புத்தகம் வாங்கிப்படியுங்கள் !! கோத்ரா சூத்ரதாரி மோடி !!!இது திட்டமிட்ட இனபடுகொலை !!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உண்மையை வெளிக்கொண்டுவந்த புத்தகம் வாங்கிப்படியுங்கள் !!
கோத்ரா சூத்ரதாரி மோடி !!!இது திட்டமிட்ட இனபடுகொலை !!


"குஜராத் திட்டமிட்ட இனப்படுகொலை!!

சதிகார, கொலைகாரக் காவிகள் கொக்கரிக்கிறார்கள்....

இந்திய ஜனநாயகத்தின் ஞாபமறதிப் பதிவேட்டில் ஏற்றப்பட்டு விட்ட குஜராத் இனப்படுகொலையை, கொலையாளிகளின் இரத்தக் கவிச்சு வீசும் வாக்கு மூலங்கள் வழியாகவே நம் நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறது தெஹல்கா வார இதழ். குஜராத் படுகொலை குறித்து இதுவரை நாம் அறிந்திராத இரகசியம் எதையும் தெஹல்கா வெளிக் கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் இது காறும் நாம் பொதுவாக அறிந்திருந்தவை பற்றிக் குறிப்பாகவும், ஆதாரபூர்வமாகவும், குற்றவாளிகளின் வாக்கு மூலமாகவும் ஆவணப்படுத்தியிருக்கிறது. அவ்வகையில் இதுவரை நாம் அறிந்த புலனாய்வு இதழியங்களின் மத்தியில் இந்தப் பணி தனித்துவமிக்கதாய் இருக்கிறது.

மதவெறியை முறியடிக்கும் ஒரே நோக்கத்துக்காகத் தான் வேறு வழியின்றி காங்கிரஸ் அரசை ஆதரிப்பதாகக் கூறிக்கொள்ளும் வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளோ சம்பிரதாய கண்டனத்துக்கு மேல் எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க.வின் முன்னாள் கூட்டாளிகளான தி.மு.க, பா.மா.க, ம.தி.மு.க கட்சிகளோ அப்படியொரு சம்பிரதாயக் கண்டனத்தைக் கூடத் தெரிவிக்கவில்லை.

தெஹல்கா, நவம்பர் 3, 2007 இதழில் வெளிவந்துள்ள இந்தப் பேட்டிகளும் கட்டுரைகளும் இந்தக் கணம் வரை ஊடங்களால் திட்டமிட்ட இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன என்பதால், தமிழக மக்களின் பலருக்கு இந்த உண்மைகள் போய் சேரவில்லை. பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டத்தில் சிறந்ததொரு மரபைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் மக்கள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்வதன் மூலம் பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடியும் என்பதால் இவற்றை மொழியாக்கம் செய்து வெளியீடுகிறோம்.

அநீதிகளுக்கு அஞ்சுவது, பணிவது, சகித்துகொள்வது, இறுதியில் அதனுடன் வாழப்பழகிக் கொள்வது என்ற அடிமைப் புத்தி நமது சமூகத்தில் தோற்றுவித்திருக்கும் மவுனத்தைக் கலைக்க விரும்பியே இந்த மொழிபெயர்ப்பைக் கொண்டுவருகிறோம். எனவே, இந்த வெளீயிடு உங்கள் மீது தோற்றுவிக்கும் தாக்கம் அபோதைக்கு எழுந்து அடங்கும் கோபமாகக் கரைந்து விடக் கூடாது. அது பார்ப்பன பாசிசத்தை எதிர்க்கும் செயல்பூர்வமான எதிர்வினை ஆகவேண்டும், ஆகும் என்று நம்புகிறோம்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அடுத்து ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மதவெறியர்கள் அரங்கேற்றிய முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகளை இன்று தெகல்கா இதழ் வீடியோ காட்சிகளாகவே ஆதாரபூர்வமாகவே அம்பலப்படுத்தி உள்ளது. ஆனால் உச்சநீதிமன்றமும், ஓட்டுப்பொறுக்கிகளும் அதுபற்றி வாய்திறக்க மறுக்கின்றனர். காரணம் வேதாந்தி மன்றமாகவும், அந்த காலிகளுடன் பொறுக்கி தின்ற கட்சிகளாகவும் இவர்கள் இருப்பதால் தான்.
..
படுகொலைகளை போலவே அதற்கு காரணமானதாக இவர்கள் கூறும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே எப்படி திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் காலிகளால் நடத்தப்பட்டது என்று இந்த நூல் நிரூப்பிக்கின்றது.

'தேசத் தந்தை காந்தி பிறந்த மண்ணில' என நுலில் கேட்டு இந்து மதவெறியின் மிதவாத முகமான துரோகி காந்தியினை ஆதரித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் காந்தி பிறந்த மண்ணில் தான் இந்து பயங்கரவாதத்தினை அரங்கேற்ற முடியும். இவ்வாறு தீ பற்றுவதற்கு சறுகுகள் காய்ந்து இருப்பதற்கு ஏற்பாடு செந்தவரே காந்தி தான் என்பது யதார்த்தம்.

இன்று இந்து மதவெறியினை போலிகளும், காங்கிரஸ் துரோகிகளும் இந்து மதவெறியின் மிதவாத முகமான காந்தி, பாரதி, விவேகானந்தர் போன்ற ஆட்களை ஏற்றுக்கொண்டு, அதனுடன் கூடிக்குலாவி கொண்டே எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்கள்.இருப்பினும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து மறைக்கப்பட்ட உண்மைகளை அறியும் விதத்தில் இந்நூலினை படிக்கலாம்

~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10
~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A
~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!

இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~