அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 31 ஆகஸ்ட், 2013

தமுமுகவை கண்டு அரளும் சங்பரிவார கும்பல்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


  • தமுமுகவை கண்டு அரளும் சங்பரிவார கும்பல்!


சங்பரிவார்களின் சதி செயல்களை தமிழகத்தில் அரங்கேற்ற முடியவில்லை காரணம் தமிழகத்திலே மனிதநேயம் போற்றும் பண்பாளர்கள் இருப்பதால் என்ற உண்மையை யாவரும் அறிவோம். காவி கும்பல் தன் சதிகார செயலை எங்கேனும் செய்தால் இஸ்லாமியர்கள் துணிவோடு கண்டிப்பதோடு பல மாற்றுமத சகோதரர்களும் நடுநிலையோடு கண்டிப்பதோடும் இஸ்லாமியர்களோடு அரணாக நின்று போராடியும் வருகின்றனர்.

காவியர்களின் முஸ்லிம் விரோத போக்குகளை தமுமுக ஆங்காங்கே தடுத்து நிறுத்தி வருகிறது. சதிகாரர்களின் சதி செயலை முறியடிக்கும் வண்ணம் உடனுக்குடன் சமூக மக்களை அமைதிபடுத்தி சட்டத்தின் முன் ஜனநாயக வடிவில் எதிர்கொண்டு எதிரிகளின் சூழ்ச்சியை தவிடுபொடியாக்கி வருகிறது தமுமுக. தன்னுடைய எந்த திள்ளுமுள்ளு வேலைகளையும் தமிழகத்தில் அரங்கேற்ற முடியவில்லையே என்ற நிலைக்கு காவிகள் தள்ளப்பட்டவுடன் தற்போது தனது நிர்வாகிகளின் கொலை சம்பவங்களை முஸ்லிம்கள் மீது திருப்பிவிட்டு ஆதாயம் தேடவும் முற்பட்டு மூக்கறுபட்டு நின்றனர் காவிகும்பல்கள்.

இந்நிலையில் மீடியாக்களிடமும், பத்திரிக்கைகளிடமும் தமுமுக தீவிரவாத இயக்கம் இவர்களை தடைசெய்ய வேண்டும் என்றும் கொக்கரித்து வரும் காவிகளுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் தமுமுகவே சவாலாக நிற்கிறது. ஆகவே தமுமுகவினர் மீது கொலைவெறி தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நேற்றயை தினம் திண்டுக்கல் 34 வது வார்டு தமுமுக தலைவர் வீட்டின் மீது கொலை வெறியோடு இந்து மக்கள் கட்சியின் பயங்கரவாதிகளால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. 

எப்படியாவது தமுமுகவினரை ஒழித்துவிட்டால் நமது வேலைகள் செவ்வனே நடத்தலாம் என்ற கணவில் வளம் வரும் காவி கும்பல்கள் தமுமுகவினரின் மீது கொலைவெறியோடு அழைந்துவருகின்றனர் என்பதை இதன் மூலம் நாம் அறியமுடிகிறது.

அட காவி பயங்கரவாதிகளா நாங்கள் அற்ப இவ்வுலக வாழ்க்கைக்காக இயங்கவில்லை. எங்களுக்கான நற்கூலி இறைவனிடம் உண்டு. நாளை இறைவனின் திருப்பொருத்தத்தை அடையவேண்டும் என்பதற்காகவும், எங்கள் சமூக மக்களை மதி கொண்டு பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவும் ஜனாநாயக வழியில் களம் அமைத்துள்ளோம்.

எங்களை மீண்டும் மீண்டும் சீண்டினால் சின்னா பின்னமாகிவிடுவீர்கள்...!!!

தமுமுக தமிழக முஸ்லிம்களின் வேற்கள் எங்களை அழித்துவிடலாம் என்று கணவு கண்டால் அது உங்களை நாசமாக்கிவிடும் எச்சரிக்கை....!!
- முத்துப்பேட்டை முகைதீன்
 

Inline image 1

--

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10
____________________________________________

________________________
T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!