அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 12 டிசம்பர், 2013

ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்:

தமுமுக இணைந்து நடத்திய வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தமுமுக வரவேற்பு!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

“ சமூகத்தின் கட்டுக்கோப்பையும், கலாச்சாரத்தையும் கெடுக்கும் விதமாக சமூகத்தில் ஊடுருவி ருந்த ஓரின சேர்க்கை என்ற விரும்பத்தகாத, மக்கள் வெறுக்கும் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் அது தண்டனைக்குரிய கொடும் குற்றம் என அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம்.

இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என 2004 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில் ஓரின சேர்க்கை சட்ட விரோதமாகாது; அதற்கு தடை விதிக்கும் 377வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியது. இது நாடெங்கும் பெரும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்த தீர்ப்பினை தடை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டு வழக்கினை சந்தித்தது. இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதித்து ஓரின சேர்க்கை ஒரு கிரிமினல் குற்றம்; தண்டனைக்குரியது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, நீதிபதி முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

சரியான காலகட்டத்தில் வழங்கப்பட்ட சரியான தீர்ப்பு என வரவேற்கும் அதே நேரத்தில் ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து உரிய சட்ட திருத்தம் கொண்டு வரலாம் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனை ஒட்டுமொத்த இந்திய சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

எனவே ஓரின சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். தண்டனை வழங்கும் 377வது பிரிவை எந்நிலையிலும் ரத்து செய்துவிடக்கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
(ஜே.எஸ். ரிபாயீ)